பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைதரு செயல் சிதறிய மையெலாம் திரையிற் படுங்கால் இதுதான் சித்திரம் எனிலது சரியோ? உளிபடு பொருளெலாம் உலகில் நிலைபெறும் ஒளிமிகு சிற்பமென் றோதுதல் முறையோ? மதிற்க வர் மட்டும் மாந்தர் வதியும் புதுக்குடில் என்றால் பூவுல கேற்குமோ? களியர் போலக் கழறும் மொழியெலாம் நளிசுவைக் கவியெனல் நகைதரு செயலே! 30 - கெஞ்சிற் பூத்தவை