பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க தமிழரசு கற்றறி புலவர் நாவில் களிநடம் புரியும் பாட்டால் நற்றமிழ் மணக்கும் பூங்கா; நயமிகு போட்டி யிட்டு வெற்றியில் மிளிரும் நல்ல

  • வெண்டளை மலருங் காடு; தற்கினை தானே யான

தமிழர சென்னும் ஏடு! வயல்களிற் புரட்சி செய்து வளமைகள் சேர்க்க வேண்டிச் செயல்முறை யனைத்துங் காட்டிச் சீர்செயும் உழவர் தோழன்; பயனுறு தொழில்கள் ஓங்கப் பயிற்றிடும் பள்ளி யாசான்; அயலவர் கண்டு சொன்ன அறிவியற் கலைசேர் கோவில்!

  • வெண்டளை - வெண்பா

கவியரசர் முடியரசன் E 31