பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரிடம் அறிந்து சேர் நளிமலர்க் காவுள் வளிவரு மாகின் குளிர்வுறும் மணம்பெறும் நலமும் கொடுக்கும்; சுடுநிலந் தழிஇ அதுவரு மாகின் கொடு’வளி யாகித் துயர்தான் கொடுக்கும்; தேனொடு கலந்தால் ஆன்பால் சுவைமிகும்; நீரொடு கலக்குமேல் சீரது குறையும்; இருசுழிக் கொம்புடன் வருகுறிற் ககரம் பெருகிய ஒலியுடன் நெடிலெனப் பெயர்பெறும்; ஒருசுழிக் கொம்புடன் காவெனும் நெடிலுறின் குறைவுறு மொலியுடன் குறிலெனப் பெயர்பெறும்; நல்லவர்ச் சார்வோர் நல்லோ ராகுப அல்லவர்ச் சார்வோர் அல்லரா குயவே; சேரிடன் அறிந்து சேர்க இன்றேல் சீரழி வாகிச் சிறுமை மிகுமே!

  • வளி - காற்று

(29–4–1980) கவியரசர் முடியரசன் 0 35