பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகையும் மனத்தன் அகவை எனக்கோர் இருபத் தைந்தில் பகரரும் விருப்பால் பழகினேன் நின்பால்; மணிவிழாக் கடந்தது மற்றதன் பின்னும் பிணிவிடா* திருந்து பேணினேன் நின்னை; அல்லும் பகலும் அகலா திருந்து புல்லிப் பயின்று பொழுதெலாம் போற்றினேன்; தீயன் என்றுனைச் செப்பின ராகினும் நீயென் தோழன் எனநான் நினைந்தேன்; துணைவி நல்லாள் நின் தொடர்பை விடுகெனப் பணிவுடன் பலநாள் பகர்ந்தனள் எனினும் பிரிந்தே னல்லேன் பித்துடன் நின்னொடு திரிந்தேன் மகிழ்ந்தேன் தெரிகுவை அனைத்தும்! கவலைகள் என்னைக் கவ்வும் பொழுதெலாம் உவகை* பெறுவான் உன்னை நயந்து கற்பனைக் காவுள் கைத்தலம் பற்றிப் பொற்புடன் உலவுவேன் புதுப்புதுக் கவிதைகள் எத்தனை எத்தனை இயம்பினை இனியாய்! நலம்பல நல்குவை யாகினும் நண்பா பொலிந்த தோற்றமும் புகைந்த மனமும் _ -

  • வயது, 'தொடுப்பு, "'பெறும்பொருட்டு,

36 - நெஞ்சிற் பூத்தவை