பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடவன் என்னுடன் பழகி அன்புடன் தந்தனன் எழுதி பாடலை நெஞ்சொடு தழுவிப் பாரினை மறந்தேன் எளிதில்! எழுத்துஞ் சொல்லும் பழமை எழுதும் பொருளோ புதுமை பழத்தின் சுவைபோற் கவிதை படைத்தவன் முன்நான் பதுமை! புணர்ச்சி விதிகள் எளிமை பொருளின் சுவையோ அருமை உணர்ச்சி வடிப்பிற் புதுமை 'உவமை யறியாக் கவிதை = . (3–4–1982) 78 ) நெஞ்சிற் பூத்தவை