பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

திக்கும் சிவ பூசைக்கும் நடக்க வேண்டியதற்கு ஆயிரம் பூவராகன் வட்டிக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுக்கவும்.

திருவையாற்றிலே யிருக்கிற பண்டார சன்னிதி திருக் கூட்டங்களுக்கும், மயேசுர பூசை செலவுக்கும் ஆயிரத்தைந் நூறு பூவராகன் வட்டிக்கு வைத்து, அதிலே வருகிற வட் டியை மாதம் மாதம் உடனுக்குடனே மயேசுர பூசை செல வுக்குக் கொடுத்து வரவும்.

நான் இரண்டாம் விவாகம் பண்ணின வேதாரண்ணி யத்துப் பெண்ணுக்குக் கொடுத்திருக்கிற நகை போக, பிறந் திருக்கிற பெண்ணுக்கு ஐந்தாறு வயது ஆன பிற்பாடு, அதற்குக் கல்யாணச் செலவுக்கும் நகை தட்டுமுட்டுக்கும் ஐயாயிரம் பொன்........ .கொடுக்கவும்.

என்னுடைய உடன்பிறந்தாள் மகன் முத்தையா என் கிற புத்தியில்லாத பிள்ளையாண்டானுக்கு அவன் மனை விர்த்தி நடப்பிவித்துக் கொள்ளுகிறதற்கு ஐயாயிரம் பூவரா கன் எங்கேயாகிலும் வட்டிக்கு வைத்து அதில் வருகிற வட் டியை அவனுக்குக் கொடுக்கவும்...........நாராயணப் பிள்ளை மகன் ஐயா பிள்ளைக்கும், அவர் குழந்தைகளுக்கும் பதினுயிரம் வராகன் ரொக்கம் கொடுக்கவும்.

இந்த மட்டும் செலவு போக, குறை யிருக்கிறதை எங்கள் தமக்கையாரும், என் பெரிய பெண்சாதியும் சொல்லுகிறபடிக்கு நாராயணப் பிள்ளையவர்கள் நடப்பித்து வரவேண்டும். நான் ஜீவந்தன யிருக்கும்போது எங்கள் குருக்களையா, அண்ணு இராமலிங்கப் பிள்ளையவர்கள் அறிய விநாயகமூர்த்தி எழுதினது.

இப்படிக்கு, (Sd) கா. V. பச்சையப்பன்.

(Sd) அண்ணுக் குருக்கள் அறிவேன். (Sd) ராமலிங்கம் அறிவேன்.