பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 நெஞ்சுக்கு நீதி அந்தக் வெடித்தது! குற்றச்சாட்டுக்கு அன்றைக்கு கனம் ஏற்றிப் பேசியவர்கள்; கொள்கைப்பற்றால் கூட அல்ல; சிவாஜி யின் மீதிருந்த பொறாமையால் அவரை வெளியேற்ற வெகுண் டெழுந்தனர்! கட்சியிலிருந்துதான் வெளியேறினாரே தவிர, அண்ணாவின் அன்பு உள்ளத்திலிருந்து அவர் வெளியேறவில்லை! எங்களின் பாசம் மிகுந்த நட்பு, அந்த வெளியேற்றத்தால் வெட்டப்பட வில்லை! அது தொடர்ந்தது - தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!