பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி - 119 களும், ஸ்தாபனங்களும் இங்கு இருந்தன என்று தமிழ்நாட்டில் பல இடங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் நாம் அறிகிறோம்." ஜாகிர் உசேன் அவர்களின் இந்த சிறப்பை தமிழரின் வரலாற்றுப் பெருமையை மீண்டும் ஒரு உரை, தமிழின் முறை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்தது. அண்ணாவின் தலைமையில் நடைபெற்ற அந்த "உலகத் தமிழ் மாநாட்டுத் தொடக்கவிழா" வில் வரவேற்புரையாற்றிய வர், தியாகச்சுடர் காமராஜர் அவர்கள்! முன்னால் முதலமைச்சர் என்பதற்காக அல்ல; தமிழகத்துத் தலைவர்களில் ஒருவர் என்ற பெரும் மரியாதையுடன் அண்ணா அவர்களே நேரில் சென்று அந்த விழாவில் காமராஜர் அவர்களைக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட பெருந்தன்மையை எப்படித்தான் போற்று வது!