பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 323 .323 நல்ல வேளை தனியாக ரசிக்கின்ற வாய்ப்பெனக்கு தப்பினேன் அதனாலே பெண்ணொருத்தி அருகிருந்தால் நீரூற்றின் வண்ணத்தைக் கணக்கெடுத்து - மறுநாளே வகைக்கு ஒன்றாக ஆடை கேட்பாள்." பின்னர் 22-11-71 அன்று சிகாகோ நகரைச் சென்றடைந் தேன். அங்கு "வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகையைச் சேர்ந்த திரு. வாரன் உன்ன என்பவரும், "பால்டிமோர் சன்" பத்திரிகை யைச் சேர்ந்த திரு. ஆடம்பிளேமேர் என்பவரும் என்னைச் சந்தித்து முறையே தங்கள் பத்திரிகைகளுக்கான பேட்டியினை சிறப்பாக வெளியிட்டனர்.