பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 என்னுரை மனிதன், நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயச் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் நிலையில் முடித்துவிட்ட என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து "நெஞ்சுக்கு நீதி" என்ற தலைப்பில் இந்தப் பெருநூலின் முதற் பாகத்தைத் "தினமணி கதிர்" இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை “குங்குமம்” இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்கும்போது அறுபது வயதைக் கடந்து; இந்த நூல்களுக்கான முன்னுரையை எனது அறுபத்தி இரண்டாவது அகவையின்பொழுது எழுதுகிறேன். இந்த அறுபத்து இரண்டு ஆண்டுகளில் பெரும் பகுதி செலவாகியிருக்கிறது பொது - மிகப் வாழ்வுக்கே என்பது, என் இதயத்துக்கு ஆறுதலைத்தர வல்லதாகும். எஞ்சியிருக்கும் நாட்களும் சிறப்பாகத் தமிழுக்கும், தமிழின மக்களுக்கும் பொதுவாக மக்கட் பணிக்கே பெரிதும் பயன்பட வேண்டுமென்பது என் தணியாத ஆசை.