பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி33 இழந்து நிற்கும் இந்த மிகச்சோதனையான நேரத்தில், அக்கட்சிக்கு இத்தகைய தலைவர் தேவையானதே என்று டெல்லி வட்டாரத்தில் உணரப்படுகிறது." காணண மதிப்பு மிகுந்த அந்த ஏடுகள் சூட்டிய புகழாரத்தைக் கண்டு, என்னை நான் மறந்துவிடாமல் அடிப்படை உண்மை யொன்றைத் தெளிவாகப் புரிந்துக்கொண்டேன். மொழிப் பிரச்சினை, மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு ஆட்சியில் மட்டும் அமர்ந்துவிட்டால் போதாது ஆட்சியையே இழக்க நேரிடினும் கூட கொண்ட குறிக்கோள் களை நிறைவேற்றிடக் கழகத்தை மேலும் வலுப்படுத்தி வளர்த் திட வேண்டுமென்பதுதான் அந்த ஏடுகள்மூலம் நான் புரிந்து கொண்ட உணர்வாகும். அந்த உணர்வின் காரணமாக என்னுடைய பெயர் ஒரு சிலருக்கு "கெட்டவார்த்தை”யாகக்கூட ஆகிவிடலாம். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத இரு பெரும் தலைவர்களின் கரம் பிடித்து அவர்கள் ஊட்டிய உணர்வினால் வளர்ந்த எனக்கு மட்டும் அதனால் சோர்வு ஏற்பட்டு விடுமா என்ன!