பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 நெஞ்சுக்கு நீதி - அவர்கள் தங்கள் கடமையைச் செய்தார்கள். வீட்டில் ஸ்டாலின் இல்லை! அவர்களை வெறுங்கையுடன் அனுப்புவது எனக்கு என்னவோ போலிருந்தது -அதனால் அவர்களைப் பார்த்து "வேண்டுமானால் நாளைக்கு என்னைக் கைது செய்வதை, இப்போதே செய்து கொண்டு போங்களேன் என்றேன். மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுப் போலீசார் புறப் பட்டனர். ஆட்சிப் பொறுப்பு பறி போன ஓரிரு மணிநேர இடை வெளியில் இத்தனை நிகழ்ச்சிகள்! AL 02