பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே தேர்தலாற் கண்ட பயன் O சாதிகளும் பொய்ம்மொழியும் தன்னலமும் கையூட்டுந் தழைக்கும் நாட்டில் ஏதுபயன் விடுதலையால்? என்ன பயன் தேர்தலினால்? எத்தர் வந்தே ஒதுகிற மொழியெல்லாம் உண்மையென நம்புபவர் உணர்வு கெட்டு 1 மேதிகளாய் உளமட்டும் மேதினியில் தேர்தலினால் மேன்மை யில்லை. சாதியைத்தான் முன்வைத்துச் சார்கின்றார் வேட்பாளர்; சமயம் பார்த்துச் சாதிக்கோர் அமைச்சரெனச் சண்டைவரும்; சாதிக்கா சட்ட மன்றம்? மீதிப்பேர் நிலைஎன்னாம்? வீழ்ந்தவரும் மேன்மைபெற வேண்டு மென்று 2 சாதிப்போர் வேண்டுமலால் 3 சாதிப்போர் தேவையிலை சட்ட மன்றில்.


3: 1 எருமைகள். 2. வற்புறுத்துவோர். 3. சாதிச்சண்டை.

  • 68