பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே அலுவலர் இருக்கை மேலே அமர்ந்திடும் நேர மென் ன? பலவகை இதழ்கள் துரக்கிப் படித்திடும் நேர மென்ன? கலகல வென்று பேசிக் கழித் திடும் நேர மென்ன? சொலுமிடை வேளை என்றே சுற்றிடும் நேர மென்ன? அனைத்தை புங் கூட்டிப் பார்த்தால் அலுவல் செய் நேர மென் ன? தினைத்துணை நேர்மை யேனும் சேர்ந்தவர் சிந்தித் தாய்க; பனைத்துணை உயர்ந்த கோப்பிற் படிந்துள துளசி பாரீர் நினைத்தினித் திருந்து வீரேல் நேர்ந்திடும் நாட்டுப் பற்று கோப்புகள் பார்க்குங் கண்கள் கொழுவிய பைகள் பார்க்கும் தீர்ப்புகள் எழுதுங் கைகள் தின வினைச் சொறிந்து காட் டும் காப்புயர் நிலையம் இங்கே களவுகட் குடந்தை யாகும் ஏய்ப்பவர் மிஞ்சி விட்டால் எப்படி நாடு வாழும்? 74