பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



 

1. கருணை


 

வ்வியக்கத்தக்க சம்பவம், 1919 - செப்டம்பர் 12 ஆம் நாள் ‘உகாண்டா’ நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் நடந்தது. ‘மசாயி’ என்ற ஆதிவாசிகள் அடர்ந்த காடுகளில் சிறு சிறுநிலப்பகுதியைத் தமக்குச் சொந்தமாக்கி விவசாயத்தொழில் செய்து வாழ்ந்து வந்தனர்.

அங்கு புதிதாக மணம் புரிந்த தம்பதிகள் மகிழ்ச்சியாகத் தங்கள் வாழ்வைத் தொடங்கினர். ஓரிரு வருடங்களில் தாய்மை அடைந்த அப்பெண், குழந்தை பிறந்த சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்து போய் விட்டாள்.