பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

25


அப்பெண்மணி கண்ணீரோடு வணங்கியவாறு “இப்படிப்பட்ட மனிதர்களால் தான் உலகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய உமது செயல்பற்றிக் கூற வார்த்தைகள் ஏதுமில்லை. தங்களிடம் மன்னிப்புக் கேட்கும் அருகதையும் எனக்கில்லை” எனக்கூறி வருந்தியபடி செல்லும் அப்பெண்ணை அன்பு ததும்பப் பார்த்தவாறு நின்றார் மேயர்.

🌑