பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

31


நிலைகொள்ளாத மகிழ்ச்சியோடு துள்ளியெழுந்து “ஆகா, நீயல்லவா சிறந்த பண்டிதன், மனிதனைப் பற்றி எவ்வளவு சரியாக தெளிவாக அறிந்து வைத்திருக்கிறாய்! என் கவலை உன்னால் தீர்க்கப்பட்டுவிட்டது அப்பனே!” எனக் கூறிய தேவேந்திரன் சத்யம் எனும், ஆன்மாவை அறிந்து கொள்ளும் இரகசியத்தை, பிறப்பு இறப்பு அற்ற உண்மையெனும் ஒளியை மனிதனின் உள்ளே அவன் இதயத்தில் புதைத்து வைத்தான். இதை அறியாத மனிதனும் விண் - மண் - காற்று - என ஆராய்ந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்.

🌑