பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

35


இறப்பதற்கு முன் புத்தர் தன் பிட்சுகளை அழைத்து, “எந்த மனிதன் புத்தருக்கு கடைசி போஜனம் அளித்தானோ! அவன் பரம புண்ணியவான் எனக் கிராமம் முழுவதும் பறை அறிவியுங்கள்” என்றார். பிட்சுகள் கலங்கினர். அவன் கொலைகாரன் என்றனர்.

புத்தர், “உங்களுக்குத் தெரியாது, ஆயிரக்கணக்கான வருடங்களில் புத்தரைப் போன்ற ஒருவர் பிறக்கும்போது முதல் உணவு அளித்த தாயின் பாக்கியத்துக்குக் கடைசி உணவு அளித்தவன் பாக்கியம் சற்றும் குறைந்ததல்ல!” என்றார்.

எல்லோரும் சென்ற பிறகு ஆனந்தர் மட்டும் நின்றார். “நீங்கள் கூறுவதை என் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது” என்றார். புத்தர், “ஆனந்தா, நீ புரிந்து கொள்ள மறுக்கிறாய். விஷம் தன் வேலையைச் செய்தது. அந்த மனிதனோ தன் வேலையைச் செய்தான். நான் புத்தன், என்னை எனது குண தர்மத்திற்கேற்பச் செயல் புரியவிடு! இல்லையென்றால், மக்கள் என்னை என்ன சொல்வார்கள்? நான் இதைக் கூறாமல் இறந்துவிட்டால், நீங்கள் அனைவரும் சேர்ந்து அவனைக் கொலை செய்து விடலாம், அல்லது அவன் வீட்டைக் கொளுத்திவிடலாம்.