பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


நீ இதைச் செய்யவில்லையென்றால் ஜென்ம ஜென்மாந்திரத்திலும் தேவையற்ற அவமானமும் நிந்தனையும் அடைவீர்கள்” எனக் கூறினார்.

எத்துணை அழகான மரணம்! எத்துணை அருமையான மகிழ்ச்சி! எத்துணை ஆழமான சொற்கள்!

கடவுளே! மனித வர்க்கம் ஒரே ஒரு கணமாவது சிந்திக்குமா?

எல்லாப் பொருள்களும் தத்தம் குணத்தால் அறியப்படுகின்றன. விஷம் கசப்பு. விருந்தளிப்பவன் ஆனந்தமடைபவன். விருந்துண்பவன் ஆனந்தமடைபவன். நான் பூரணமான ஆனந்தம் அடைந்தேன். விஷம் என்னை அழிக்க முடியாது. விஷத்தின் குணம் சரீரத்தை அழிப்பது. நான் சாட்சி காண்பவன். இறப்பவன் அல்ல! - என்றார் புத்தர்.

நன்றி
“ஓஷோ பகவத்கீதை அதீதா பப்ளிகேஷன்ஸ்”