பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

41

இருக்கிறது. இங்குத் தங்குவோர் அனைவரின் பசியையும் போக்கி அரச வம்சத்தின் புகழை ஞாபகப்படுத்துகிறது. பல பசியாறிய வழிப் போக்கர்கள் உன்னையும் உன் மூதாதையர்களையும் வாழ்த்தி வணங்கி விட்டுச் செல்கின்றனர். ஆனால் உன்னிடம் உள்ள கல் அதை வைத்திருந்த அரசர்களை மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான வீரர்களையும் பறித்தன.

இளம் மங்கையர்களின் வாழ்வையும் பறித்தது. அவர்களை விதவையாக்கியது. இப்போது சொல் அரசே அனைவரின் இரத்தத்திலும் தோய்ந்தெடுக்கப்பட்ட அந்தக் கல் உயர்ந்ததா? பலரின் பசியைப் போக்கி நின் புகழ் பாடும் இந்தக் கல் உயர்ந்ததா?” அரசன் அசையாது நின்றான். அவன் அறிவுக் கண் திறந்தது. “ஆம் சுவாமி தாங்கள் கூறுவதே உண்மை. இனி நான் என் உயிர் உள்ள வரை போர் புரிய மாட்டேன்! அன்பே என் வழியாகக் கொண்டு வாழ்வேன். என்னுடைய இந்தச்செயலுக்காக என்னை மன்னித்தருளுங்கள் சுவாமி” என்றார்.

பாரத தேசத்தில் போற்றப்படும் அரசர்களில் இவரும் ஒருவராகத் திகழ்கிறார்.