262 命 புலவர் கா. கோவிந்தன்
நல்கா ஒருவனை, நாடி யான் கொள்வினைப், பல்கதிர் சாம்பிப், பகல் ஒழியப் பட்டிமோ, செல்கதிர் ஞாயிறே ! நீ.
அறாஅலின்று அரிமுன்கைக் கொட்டும் பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான் கறாஅஎருமைய காடு இறந்தான் கொல்லோ? உறாஅத்தகைசெய்து இவ்வூருள்ளான் கொல்லோ?
செறாஅது உளனாயின் கொள்வேன்; அவனைப் பெறாஅது யான் நோவேன்; அவனை எற்காட்டி, சுறாஅக்கொடியான் கொடுமையை நீயும், உறாஅ அரைச! நின்ஒலைக்கண் கொண்டீ; மறாஅ அரைச! நின்மாலையும் வந்தன்று; அறாஅது; அணிக இந்நோய்.
தன்நெஞ்சு ஒருவற்கு இணைவித்தல் யாவர்க்கும் அன்னவோ காம! நின் அம்பு! கையாறு செய்தானைக் காணின், கலுழ்கண்ணால் பைளன நோக்குவேன்; தாழ்தானைப் பற்றுவேன்; ஐயம்கொண்டு என்னை அறியான் விடுவானேல் ஒய்எனப் பூசல் இடுவேன்மன், யான் அவனை மெய்யாகக் கள்வனோஎன்று,
வினவன்மின் ஊரவிர்! என்னை; எஞ்ஞான்றும் அடாஅ நறஉண்டார் கோல மருள விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் படா.அமை செய்தான் தொடர்பு.
கனவினால் காணியகண் படாஆயின், நனவினால், ஞாயிறே! காட்டாய் நீஆயின்,
35
40
45
50
55