பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

நெருப்புத் தடயங்கள்

ஒனக்குப் புரியலியா? கலாவதியைக் காப்பாற்றுனது மாதிரி என்னையும் காப்பாற்று தமிழு...”

தமிழரசி, விஜயாவிடம் கண்களால் மன்னிப்புக் கேட்டபடியே, அந்த வீட்டைவிட்டு வெளியேறினள். கால்களால் நடக்க முடியவில்லை. கண்களால் பார்க்க முடியவில்லை. மனதால் நினைக்க முடியவில்லை. தாமோதரன் வீட்டின் சுற்று வட்டார ஆண்களும், பெண்களும் தன்னையே கண்களால் சல்லடை போடுவது தெரியாமல் தள்ளாடித் தள்ளாடி நடந்து, ஒரு ஆலமரத்தின் கிளையை, ஆதரவாகப் பற்றிக் கொண்டாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தமிழரசி, தன் காதுகளுக்குக் கேட்கும்படியே தானகவே பேசினாள்.

“இழக்கக் கூடாத எல்லாரையுமே நான் இழந்துட்டேன். நான் இழந்தால்கூட பரவாயில்ல. ராஜதுரை, விஜயாவை இழந்தான். கலாவதி, அண்ணனை இழந்தாள். என்னுேட பெற்றாேர், என்னை இழந்துட்டாங்க. இனிமேல் இந்த ஊரையே நான் இழக்கப்போறேன்... இந்த ஊருக்கு இனிமேல் திரும்ப மாட்டேன்... திரும்பக்கூடாது.”

தமிழரசி யந்திரமாய் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தாள். இப்போ புறப்பட்டால்தான் சென்னை ரயிலைப் பிடிக்க முடியும். என்னைப் பொறுத்த அளவில் அது திரும்பி வராத ரயில்-என் காதலைமாதிரி.”

தலையே என்ஜின் ஆகி, உடம்பே ரயில் பெட்டிகளாய் ஆனதுபோல், தமிழரசி தலையை நீட்டி, உடம்பைச் சாய்த்து நடந்தாள்.

“அவளை தடம்புரள வைப்பதற்காக முத்துலிங்கம் இன்னெரு திக்கில் நடந்துகொண்டிருந்தார்.”