பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


12

இக்கட்டான சமயத்தில், நமக்கு நாமே வழிகாட்டிப் போவதுண்டு. இதற்கு, மனதுள் புதையுண்டு கிடக்கும் மனேசக்தி தான் காரணம் என்பார்கள்.

மயானத்தில், பதி இழந்தனம், பாலனை இழந்தனம்’ என்று அரிச்சந்திரன் புலம்பியதாக, நல்லூர். வீரை. ஆசுகவிராயர் எழுதிய வரிகளே நினைத்து, அந்த அனதரவு அரிச்சந்திரனுடன் தன்னை ஐக்கியப்படுத்தி, பேதலித்து நின்ற தமிழரசி, அந்த பொய்யாமை மன்னன், அடுத்துக் கூறிய கதி இழக்கினும் கட்டுரை இழக்கோம்’ என்ற வரிகளை நினைத்து, புடவையை வரிந்து கட்டிக் கொண்டாள்.

இலக்கிய வரிகள், சில சமயம், சிக்கலில் தவிப் போருக்கு, தெய்வ வரிகளாகி, அசரீரி குரலாய் ஒலித்து, அடிமனுேசக்தியை, அணுசக்தியாக்கும் என்பதை எடுத்துக் காட்டுவது போல், தமிழரசி தனக்குத்தானே வழிகாட்டி யாகி மீண்டும் வீராங்கனே யாளுள். குனிந்த தலையோடு நின்றவள், நிமிர்ந்த தலையோடு நடந்தாள். அவளுள் ஒரு அசைக்க முடியாத முடிவு ஏற்பட்டது. இனி, யார் தடுத்தாலும் தனது மனமே, அதற்கு எதிராய் வாதிட் டாலும் மசியப் போவதில்லை என்ற தீர்க்கத்துடன் வீட்டை நோக்கி நடந்தாள்.

அக்கம் பக்கம் நின்று, தன்னையே அதிசயமாய் பார்த்தவர்களை, கண்டும் காணுமலும் நடந்தவள், அனிச்சையாக, வீட்டிற்குள் வந்த பிறகுதான் அது, தான் பிறந்து வளர்ந்த வீடு என்பதை உணர்ந்தாள். வீட்டின் மூன்று மூலைகளிலும், சொல்லி வைத்ததுபோல், பெற்றாேரும், அண்ணனும், தமக்குத் தாமே துணை என்பது போல் சாய்ந்திருந்தார்கள். பகவதியம்மா, வாய்க்குள் சயாடுவது தெரியாமலும், அருணுசலம் அசைவற்றும், ராஜ