பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

129


"அதை நான் பார்த்துக்கிறேன். இப்போ நீங்க ஸ்பீடாய் போங்க. நான் பின்னால வாரேன்" தமிழரசி பதிலளித்தாள்.

போலீஸ்காரர் தயங்கியபடியே சைக்கிளில் ஏறினார். அவர் போகட்டும் என்பது போல் தமிழரசி நின்றாள். அவரைப் பார்க்க விரும்பாமல், ரயில் நிலையத்தைப் பார்த்தாள். அங்கே, கூட்டம் இன்னும் கலையாமல், அவளையே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தது. அவளைப் பார்த்த விதம் என்ன விதமோ, தமிழரசி, கூனிக் குறுகினாள். கண்கள் கூசி, வாய் கோணி, உடம்பெல்லாம் ஆட்டம் எடுத்தது... அந்தக் கூட்டத்தின் முன்னிலையில், தான் நிர்வாணப் படுத்தப் பட்டது போன்ற தவிப்பு. இதற்கெல்லாம் யார் காரணம்? யார்? எவன்?

தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் எதற்குக் கூப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொண்டாள். கண் முன்னால் நடந்த அநியாயத்தைக் கண்டித்ததற்காக அவர் தன்னை மறைமுக மாகக் கண்டிப்பதை உணர்ந்த அவள் ஒரு நிமிடம் சோர்ந்தாள். ஒருவரை, நம்மால் தாக்கி சேதப்படுத்த முடியும் என்று தெரிந்தும், மனிதாபிமானத்தால் விட்டுக் கொடுக்கும் போது அதுவே நம் பலத்தை குறைக்கக் கூடியதானால் எப்படி? நாம் ஒருவருக்குக் காட்டும் சலுகைகளே, நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களானால் எப்படி?

‘எப்படி' என்பதற்கு 'என்ன' என்பதையும், 'ஏன்' என்பதையும் அறியத் துடித்தவள் போல் சீறி நடந்தாள். அங்கிருந்தபடியே தாவிப் பறந்து அந்த போலீஸ் மனிதரிடம் நேருக்கு நேராய் சூடு சொரணையுள்ள கேள்விகளைக் கேட்டே தீர்வது என்பது போல் அவள் ஓடினாள் . பற்களைக் கடித்தபடி, கால்களை கடத்திக் கொண்டிருந்தாள்.

போலீஸ் நிலையத்தில் ஒரே கூட்டம், சர்வ ட்சித் தலைவர்களின் சமரசக் கூட்டம் சென்னையில் நடைபெறு-

தெ.-9