பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்


வந்தது? எங்கள காலால உதறி கையால தள்ளிவிட்டுடுங்கய்யா.’’

தோட்டத்துப் பாண்டவர்களான அந்த ஐவரும் கலாவதியையும், மாடக்கண்ணுவையும் அப்போது மனிதப் பிறவிகளாக நினைக்கவில்லை. கோவில்களில் வெட்டப்படும். ஆடுகளாக, சமையலறையில் திருகப்படும் கோழிகளாகத் தான் நினைத்தார்கள். இப்போது அவர்களுக்கு முத்து லிங்கத்தின் குடும்ப மானமே பெரிதாய் தெரிந்தது. ஒரு தடவை, குடித்துவிட்டு போலீசில் மாட்டியபோது, வீரபத்திரனை மீட்டியவர் முத்துலிங்கம். பிள்ளையார் மாமா பக்கத்து வயல்காரனின் பல் ஒன்றை வெளியே எடுத்துப் போட்டபோது, அதை போலீசிற்குப் போக விடாமலே சரிக்கட்டியவர் இந்த முத்துலிங்கம். அவ்வப்போது, ஐந்து பத்தென்று கடன் கொடுப்பவரும் இந்த முத்து லிங்கம்தான். எல்லாவற்றிற்கும் மேல் பங்காளி. அவன் மானமே போகிறதென்றால், அப்படிப் போன மானத்தை நிலைநாட்ட, எந்த மானங்கெட்ட செயலை வேண்டு மானாலும் செய்யலாம். செய்ய வேண்டும்!

ஏதோ ஒருவித சேடிஸத்தில்-அதாவது பிறர் துன்பத்தைக் கண்டு மகிழும் மனோபாவத்தில் சிக்கி, ஐவரும் எக்காளமாகச் சிரித்தார்கள். ஏளனமாய்ப் பார்த் தார்கள். என்னடி நெனைச்சே? இது மானத்தை மட்டுமே உயிராய் நினைக்கிற மவராசா குடும்பம். ஒண்ணன் வினைதீர்த்தான் எங்க பொன்மணியை கடத்திட்டுப் போனதுக்கு, அவன் ஆயுள் முழுசும் வருத்தப்படனும். நீங்க பட்ட பாட்டையும், அதைப் பார்த்துட்டு அவன் படப்போற) பாட்டையும் பார்த்தால், அப்புறம் எந்த செறுக்கி மவனும் எங்க குடும்பத்து பொம்பிளைங்கள ஏறெடுத்துப் பார்க்கமாட்டான். இவ்வளவுதான் எங்களுக்குத் தெரிஞ்சுது. ஒங்கள விடக்கூடாது என்கிறது எங்க பையன்’ உத்தரவு. இதுக்குமேல எது பேசணு முன்னாலும்