பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

நெருப்புத் தடயங்கள்

“சில்லறை, விஷயமுன்னு...”

“இப்போ நான் கேட்கப் போற விஷயமும் சில்லறையான்னு தயவு செய்து சொல்லிடுங்க. போன வாரம் பூமிநாதன் எஸ்டேட்ல, ஒரு தொழிலாளி தூக்குல தொங்குனாராமே, நீங்கதானே விசாரிக்கப் போனது?”

“ஆமாம் சார். அது தற்கொலைதான் சார்.”

“தற்கொலையோ, வெறுங்கொலையோ? நீங்க, எந்த எஸ்டேட்ல அந்தத் தொழிலாளி தூக்குல தொங்குனாரோ, அந்த எஸ்டேட் முதலாளி அனுப்புன கார்லயே விசாரணைக்குப் போயிருக்கீங்க. இதனால், ஒரு கொலைக்கு போலீசும் உடந்தைன்னு தொழிலாளிங்க நினைக்கிறாங்க. எஸ்டேட் ஒர்க்கர்ஸ் அஸோஷியேஷன் பிரதி நிதிகள் வந்து, என்கிட்ட பேசிட்டுப் போனாங்க. நான் ஏதாவது பண்ணாட்டால் மேலே மேலே போவாங்களாம். இதுக்கு என்ன சொல்றீங்க. இதுவும் சில்லறை விஷயந்தானா?”

அவனை, மனதுக்குள் இளக்காரமாய் நினைத்த கான்ஸ்டேபிள் திகில்பட்டார். இந்த மாதிரி சமாச்சாரங்களில் சிக்கி, காவல் துறை வீரர்கள் சந்திக்கு வந்தது மனசுக்கு வந்தது. அதோடு பத்திரிகைக்காரங்க சந்தி சந்தியாய் எழுதிபெட்டுவானுவ... குழைந்தார்:

“அய்யா தான் அந்த லேபர் விஷயத்தை ...”

“நீங்க மனசில எந்த கல்மிசமும் இல்லாமல் தானே கார்ல போனீங்க. அது ஒங்க விசாரணையைப் பாதிக்கலியே ?”

“ஆமாங்க அய்யா!”

“அப்படின்னா நீங்க பயப்பட வேண்டாம். எது நியாயமோ அதைத்தான் விசாரிச்சு செய்வேன். யூ கேன் கோ.”

போலீஸ்காரர் பொன்னுச்சாமி, தாமோதரனுக்கு ‘கொன்னுடுவேண்டா’ என்பது மாதிரி மீண்டும் ஒரு