பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

நெருப்புத் தடயங்கள்

தமிழரசி சட்டென எழுந்தாள். அவள் பஸ்சில் இருந்து இறங்கிய வேகத்தில், பஸ் படிக்கட்டில் ஏறிய ஒருத்தி மேல் இடித்துக் கொண்டாள். வேகமாய் கீழே இறங்கியதால், பஸ் கதவின் இடுக்கில் சிக்கிய அவள் முந்தானை கசங்கியும், நைந்தும், அவள் மனதைப்போல் கிழிந்தும், அவளிடம் மீண்டு வந்தது.

எதிர் திசை பஸ்ஸருகே வந்து நின்ற தமிழரசி, ‘வினை தீர்த்தான்’ என்று அவனை விளிக்கலாமா என்று நினைத்தாள். ‘இவனா...வினை தீர்த்தான்? இல்லை, இவன் தீர்த்தவன் அல்ல, கொடுத்தவன்,’ அவனாக தன்னைப் பார்க்கட்டும் என்று நினைத்து, அவன் பார்வையில் படும்படி நிற்கலாமா என்று நினைத்தவள், அப்படி நிற்கவில்லை; இவனுக்குப் பார்வை கிடைத்திருப்பதே, மற்றவர்களை எரிப்பதற்குத்தான், ஏறிட்டுப் பார்க்க அல்ல. இவன் கண்ணில் உள்ள ஒளி, உஷ்ணத்தால் ஏற்பட்டது. ஒளியில் ஏற்பட்ட உஷ்ணமல்ல.

வினை தீர்த்தான் பஸ்ஸில் ஏறி இறங்கி, உருட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பால் கேனும், ஒரு கலாவதி, ஒரு சித்தப்பா, ஒரு தாமோதரன், ஒரு தமிழரசி!

‘தமிழரசிக்கு, முதுகைக் காட்டிக் கொண்டிருந்த வினைதீர்த்தான், வேலை முடிந்ததும், தலையில் கட்டிய முண்டாசை எடுத்து உதறி விட்டு, உடம்பெங்கும் பொங்கிய வியர்வையைத் துடைத்தபடியே திரும்பினான். திரும்பியவன், மேலும் திரும்ப முடியாமல் நின்றான், பார்வையில் பட்டது தமிழரசிதானா என்று வாய்பிளக்க அவளைப் பார்த்தான். பிறகு தான் இந்த தமிழரசியின் சித்தப்பா மகனா என்று தன்னைத்தானே சோதனைப் பார்வையால் வீசிக் கொண்டான். தன்னை அறியாமலே அப்பாவி மாணவன் போல் தார் பாய்ந்த வேட்டியை இறக்கிக் கொண்டான்.

அவளை நோக்கி, “தமிழு!” என்று சொல்லியபடியே இரண்டடி நடந்தவன், அவள் பார்வைத் தீயில் முகம்