பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமூத்திரம்

201



“இவர் என் சொந்த சித்தப்பா மகன். இவரோடு குடும்ப விவகாரங்களைப் பேசவேண்டியதிருக்கு. நீங்க போங்க, நான் பஸ்ல வந்துடுறேன்!’’

ஒரு முன்னாள் மாணவி, தனக்குள்ளே தமிழரசிக்காய் பயந்து ‘ஒங்களுக்காக எவ்வளவு நேரமானாலும் நாங்க காத்திருக்கோம் மேடம். தனியா வரவேண்டாம், பிளீஸ் மேடம்!’ என்றாள்.

நோ, தேங்க்ஸ்! இவர் என் கஸின் பிரதர்தான். நீங்க போங்க. எனக்கு எதுவும் ஆகல. ஆகாது. ஏய் பத்மா! அவங்களுக்குச் சொல்லேண்டி.’’

“சொல்றேன். முதல்ல நானும் ஒன்னோட இருக்கணுமான்னு சொல்லு.’

வேண்டாம். நீயும் அவங்களோட போ. நான் பின்னாலேயே வந்துடுறேன்.” -

எல்லாப் பெண்களும் தயங்கியபோது, தமிழரசி சாலையை நோக்கி நடந்தாள். எல்லோரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள், பஸ்சுக்குள் ஏறி கையோடு கொண்டு வந்திருந்த சின்னஞ்சிறு சூட்கேசை எடுத்துக்கொண்டு இறங்கினாள். பிறகு தோழிகளைப் பார்த்துக் கையாட்டினாள். அவர்கள் பதிலுக்குக் கைகளை ஆட்டியபோது டிரைவர் கீரை ஆட்டினார். பஸ் கிழக்கு நோக்கியும், தமிழரசியும் வினைதீர்த்தானும், மேற்கு நோக்கியும் பாய்ந்து நடந்தார்கள்.

பிச்சாட்டுர் ஏரிக்கரையில், வினைதீர்த்தானும், தமிழரசியும் மவுனமாக நடந்தார்கள். வினைதீர்த்தான் அவளிடம் பேசப்போனான். ஆனால் அவள் முகம் இறுகியிருப்பதைப் பார்த்ததும் உள்ளடங்கிப் போனான். அவளோ அந்த ஏரியின் அடித்தளத்தையே பார்த்தபடி நடந்தாள். குறுக்கும் நெடுக்குமாய் ஆங்காங்கே வெள்ளைக் கோடுகள் போன்ற படிக்கட்டுகளால் அகல நெடுகத்