பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

203


தீர்த்தானை அதட்டினாள். தமிழரசி, பொன்மணியை மலைத்துப் பார்த்தாள். மயங்கிப் பார்த்தாள். அவள் முகத்தில் எந்த குற்ற உணர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. ஊருக்குச் செல்லும்போதெல்லாம் தன்னை முன்பு எப்படிப் பார்ப்பாளோ, அதே மாதிரி, ஈரப்பசை உதடுகள், புன்னகையால் பிரிக்கப்பட்ட பொங்கல் பானை கண்களோடே, தன்னைப் பார்ப்பவளை, தமிழரசியால் மேலும் வெறுக்க முடியவில்லை. இதழோரம் நகரப்போன புன்னகையை, வலுக்கட்டாயமாகக் கடித்தாள்.

பொன்மணியோ, அடுப்போடு போராடினாள். காணாமல் கண்டவளுடன் பேச முடியாது என்று நினைத்து, அடுப்பு விறகை வெளியே இழுத்து, அனல் கங்கை காலால் மிதித்தாள். இதற்குள், முக்காலியோடு வந்து நின்ற வினைதீர்த்தானிடம் இருந்து அதைப் பிடுங்கி, பள்ளமும் மேடுமற்ற சமதளப் பரப்பைத் தேடிக் கண்டுபிடித்து முக்காலியை அதில் போட்டுவிட்டு, தமிழரசியை கட்டிப் பிடித்துக் குண்டுக்கட்டாய் தூக்கி அதில் உட்கார வைத்தாள்.

பிறகு அண்ணி முகத்தைப் பார்த்தால், வயிறுல பசி தெரியுது. சீக்கிரமாய் ஒரு மசால் தோசையும், சுடச்சுட மசால் வடையும் வாங்கிட்டு வாங்க’’ என்றாள். அவன் சிறிது நகர்ந்தான்.

பிறகு ‘தமிழு, நீ வாரது பொன்னுக்குத் தெரியாது. அதனால் நான் சொல்லிக் கொடுத்து, அவள் எதையும் சொல்ல முடியாது. எந்த சந்தர்ப்பத்துல இது நடந்ததுன்னு அவள் கிட்டயே கேளு,’’ என்று பயபக்தியோடு சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

முக்காலியில் உட்கார்ந்த தமிழரசியையே, சிறிது நேரம் லயித்துப் பார்த்த பொன்மணி, திடீரென்று அவள் மீது பாய்ந்து, அவள் கன்னங்களில் மாறிமாறி முத்த,மிட்டாள். மரக்கிளைபோல் கிடந்த தமிழரசியின் கரங்கள்