பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

நெருப்புத் தடயங்கள்


இரண்டையும், தன் முதுகைச் சுற்றிப் போட்டபடியே “ஊர்ல எல்லாரும் சவுக்கியமா அண்ணி?’ என்றாள். பிறகு, நீங்க ஏன் ஆளே அடையாளம் தெரியாம போயிட்டீங்க?’ என்று சொல்லிக் கொண்டே, தமிழின் கால்மாட்டில் உட்கார்ந்தாள். தன் மோவாயை, அவள் மடியில் போட்டபடியே கனவில் பேசுபவள் போல் பேசினாள்.

“நீங்க பேசாமல் இருக்கதுல இருந்தே, ஒங்க கோபம் புரியுது அண்ணி. அதே சமயம் ஊர்லயும், சொந்தக் காரங்க மத்தியிலயும் ஒரு வாரம் நடக்கிற அமளிக்குப் பயந்து, எந்த பெண்ணும் தன்னோட இஷ்டத்துக்கு விரோதமான கல்யாணத்துக்கு சம்மதிக்கதை விட, அவள் தூக்குப் போட்டு சாகலாம். நான் என்ன அண்ணி செய்ய முடியும்? எப்படியோ, இவரு மேல ஒரு இது வச்சிட்டேன். எனக்கு கல்யாணமுன்னு பேச்சு அடிபட்ட பிறகுதான், இவர் இல்லாமல் என்னால வாழ முடியாதுன்னு எனக்கே தெரிஞ்சுது. ஒங்களால என் கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு சொன்னதும், இவர் கிட்ட ஒடிப் போயிடலாமுன்னு சொன்னேன். ஒடனே, இந்த மரக் கட்டை, ஒனக்கும், எனக்கும் என்ன பிள்ளே சம்பந்த முன்னு கூசாம சொல்விச்சுது. என் தலையில இது குட்டுன குட்டை அம்பலப்படுத் துனால், இந்தப் பைத்தியக்கார மனுஷர் சும்மா விகற்பம் இல்லாமல் குட்டுனேன்’னு சத்யம் போட்டாரு. என்னை குழந்தை மாதிரி நினைச் சேன்னாரு அப்போ ஏய்யா எனக்கு முத்தம் கொடுக்கத் தோணல? இதுல இருந்தே நான் வயசுப் பொண்ணுன்னு தெரிஞ்சுக்கும் போது, தலையில ஏன் கை போட்டீர்னு திருப்பிக் கேட்டேன்?

‘ஏன் அண்ணி அப்டி பாக்கீங்க? நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது, முத்துமாரிப் பாட்டி, நான் கன்னத்துல “கன்னம்’ போட்டதைச் சொன்னதும், நான் ஒடுங்கிப் போயிட்டேனேன்னு கேட்காமல் கேட்கிறீங்களா? இவரு