பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

211

பட்டுக் கொண்டிருந்த அவரை, அவனால் போகச் சொல்ல முடியவில்லை.

  எப்படி முடியும்?
  அண்ணனையும், தன்னையும் ஏவி வைத்த பட்டுக் காரில் நாகர்கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போனவர். அந்த பெரிய போலீஸ் அதிகாரியைப் பார்த்து, அவன் விவகாரத்தைச் சொன்னபோது, அதற்கு ஒனக்காக நான் மாட்டிக்க முடியுமா? மொதல்ல பொலிடிக்கலாய் ஏதாவது செய். அப்புறம் அபிஷியலாய் செய்யுறதைப் பற்றி யோசிக்கலாம்’ என்று அந்த அதிகாரி பதிலளித்தபோது, தன்னையும் தமையனையும் பல அரசியல்வாதிகளிடம் அழைத்துச் சென்றவர். அவர்கள் கேட்ட டொனேஷன்களை அள்ளிக் கொடுத்தவர். எஸ்டேட்டில் ஆயிரக்கணக்கான ரூபாயில் ‘காக்டெய்ல் காட்டி, அரசியல்வாதிகளை அதில் முக்கி, தன் கட்சியை அவர்களிடம் எடுத்துரைத்தவர். அர்ச்சுனனுக்குக் கண்ணன் தேரோட்டியதுபோல் தனக்காக சொந்த ஊருக்கே காரோட்டியவர். அப்படிப்பட்ட ‘நல்ல மனிதரை எப்படிப் போகச்சொல்வது? அண்ணனை ஜெயிலுக்குப் போக விடாமல் செய்தவரை, எப்படிப் போகச் சொல்ல முடியும்? மனிதனுக்கு நன்றி வேண்டும். அந்த நன்றி, கடமைக்கு துரோகமாய் ஆகக்கூடாதா? எவன்யா சொன்னான்? கொண்டுவா... லாக்கப்ல... போடுறேன்... பார்...
  ‘நன்றியுள்ள தாமோதரனால் பூமிநாதனை போகச் சொல்லவும் முடியவில்லை. அவரோடு சேர்ந்து இருக்கவும் முடியவில்லை... அவன்பாட்டுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தான். பூமிநாதனே அவனை உரிமையோடு கண்டித்தார்.
  "என்ன சார், நான்பாட்டுக்குப் பேசுறேன், நீங்க பாட்டுக்கு தலையை ஆட்டு றீங்க. எதுல விட்டேன்? சொல்லுங்க பார்க்கலாம்!"