பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

2 13


வச்சுடுறேன். ஆனால் , அய்யா ஒரு வார்த்தை சரின்னு சொல்லணும்.’’

பூமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பை மேற்கொண்டார்.

‘என்னய்யா பேசுறீங்க பேச்சு? தாமு தம்பி சும்மா இருக்கதுல இருந்து, ஒங்களுக்கு முழு அதிகாரம் கொடுத்திட்டார்னு அர்த்தம் ஆகலியா? இதுக்கு மேல எழுதிக் கொடுப்பாராக்கும்? தாமோதரன் சார், ஒங்ககிட்ட இந்த ஏட்டையா எவ்வளவு விசுவாசமாய் இருக்கார் பாருங்க. ஒரு வார்த்தை நீங்களும் சொல்றது! ஒங்களத்தான் சார்!’

தாமோதரன் மோவாயைத் தடவியபடியே ‘ஆங்... ஆமா...அப்படித்தான் செய்யணும்’ என்றான். பொன்னுச்சாமி, தாமோதரனை மோவாயில சுட்டிக் காட்டி, பூமிநாதனிடம் கண்ணடித்து விட்டு ரைட்டரிடம் போனார்.

சிறிது நேரத்தில், பூமிநாதன் புறப்பட்டார். தாமோதரன் நாற்காலியில் மல்லாந்து கிடந்தபடி, அவருக்கு அரைகுறை கண்களை நிமிர்த்தி குலுக்கி வழியனுப்பினன். பிறகு அப்படியே சாய்ந்தான். அந்த நாற்காலி தேர் போலவும், அவன் பிணம் போலவும் கிடந்தான்.

எவ்வளவு நேரமோ அவனுக்குத் தெரியாது. பயங்கரமான சத்த பரிவர்த்தனை கேட்டு கண் விழித்தான். உடம்பை நிமிர்த்தாமலே, வெளியே பார்த்தான். ரைட்டர் சபாஸ்டினும், ஏட்டு பொன்னுச்சாமியும், ஒருவரை ஒருவர் அடிக்காத குறையாக கத்திக் கொண்டிருந்தார்கள். தாமோதரன், எதுவுமே நடக்காதது போல் எழுந்து, அவர்களிடம் போய் மவுனமாக நின்றான். ரைட்டர் அவனை தார்மீகக் கோபத்தோடு சாடினார்.

‘இந்த ஸ்டேஷனுக்கு நீங்க இன்சார்ஜா, இல்ல எனக்கும் ஜூனியரான இந்த பொன்னுச்சாமியா சார்?