பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

நெருப்புத் தடயங்கள்



வெட்டாம்பட்டி கொலை கேஸ்ல வெட்டுனவனையும், வெட்டுப்பட்டவனையும் பார்த்தவங்க, மூணு பேர் பெயருங்களைத்தான் கொடுத்தாங்க. இந்த மனுஷன், ‘அடையாளம் தெரியாத.ஆனால் நேரில் பார்த்தால் காட்டக்கூடிய.நாலைஞ்சு பேரும் கொலை செய்தாங்கன்’னு எப். ஐ. ஆர்ல சேர்த்துக்கச் சொல்றார். இந்த மாதிரி பிளாக் மெயில் மற்ற ஸ்டேஷன்கள்ல நடக்கலாம். ஆனால் நம்ம ஸ்டேஷன்ல எதுக்காக சார் நடக்கணும்? அப்படி அடையாளம் தெரியாத நபர் யாராவது கொலையில சம்பந்தப்பட்டிருந்தால், அது இந்த பொன்னுச்சாமியாய் தான் இருக்கும்.’’

ஏட்டு பொன்னுச்சாமி, ரைட்டரை வன்முறை அங்கலாவயங்களோடு அணுகினார். உடனே ரைட்டரும் எழுந்தார். ஆங்காங்கே, துப்பாக்கிகளை துடைத்துக் கொண்டிருந்த இதர போலீஸ்காரர்கள், அங்கே தடதட வென்ற சத்தத்தோடு ஓடி வந்தார்கள். ரைட்டருக்கும், ஏட்டுக்கும் தடியடியில்லாத வாயடிகள். அம்மாக்களையும், அக்காக்களையும் கூட வாய் வழியாக இழுக்கப் போனார்கள். ஒரு காலத்தில் - ஒரு காலத்தில் என்ன காலத்தில், இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை அவனைப் பார்த்ததும், கட்டுண்டு நிற்கும் அந்த இருவரும், இப்போது அவன் முன்னாலயே மல்கட்டப் போனார்கள்.

அவனோ தனது ஸ்டேட்டஸ்’ போனதை உணராதவனாய் அவர்களை நோக்கினான். பிறகு தலைக்கு மேல் கைகளை கொண்டுபோய் கும்பிட்டான். அதைப் பார்த்த ரைட்டருக்கு, இதயம் வெடிப்பது போலிருந்தது. இந்த ஆபீஸர் எப்படிப் போயிட்டார். உடம்பு மாறியது மாதிரி, போக்கும் எப்படி மாறிட்டு. என்னால் இவருக்கு சிரமம் வரப்படாது. இவரால் நியாயத்திற்கு சிரமம் வரப்படாது. பரம பிதாவே! தேவகுமரா! பார்த்துக் கொள்ளுங்கள், பார்த்துக் கொள்ளுங்கள்.”