பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

நெருப்புத் தடயங்கள்


எங்க தோழனை முதலாளியும், அடியாட்களுமாய் சேர்ந்து கொலை செய்துட்டாங்கன்னும், ஏட்டு பொன்னுச்சாமி அதை மழுப்பிட்டாருன்னும் சொன்னோம். என்ன ஆக்ஷன் எடுத்தீங்கன்னு கேட்கிறதுக்கு வந்தோம்.”

“ஆக்ஷன? ஆமா, ஆக்ஷன் எடுத்தேன். அது கொலையில்ல, தற்கொலை. போஸ்ட் மார்ட்டம்-அதுதான் டாக்டர் ரிப்போர்ட்லயும் கொலைன்னு சொல்லல.”

டாக்டர் ரிப்போர்ட்டைப்பற்றி எங்களுக்குத் தெரியாதா சார்? போலீஸ் சொல்றபடி டாக்டருங்க ரிப்போர்ட் கொடுக்காட்டால், அவங்க வீட்ல கல்லு விழும். பொறுக்கிப் பசங்க வம்புச் சண்டைக்குப் போவாங்க. அந்தக் கதை பெரிய கதை. அது இப்போ வேண்டாம். இப்போ, எங்களுக்கும் சில விவரம் கிடைச்சிருக்கு. பூமி நாதன் எஸ்டேட்ல, எங்கள் தோழன் மார்த்தாண்டன் தொழிலாளர் சங்கம் துவக்குறதுக்குப் போயிருக்கான். பூமிநாதன் சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கல அதனால, பகலுல அவனை சாகடிச்சுட்டு, ராத்திரில மரத்துல தொங்கப் போட்டுட்டாங்க மனச்சாட்சிக்குப் பயந்த பூமிநாதனின் வீட்டு வேலைக்காரப் பையன், எங்ககிட்டே வந்து அழுதுட்டு, இப்போ... எங்க கூடயே இருக்கான்.”

தாமோதரன், பேச முடியாத குரலில் பேசினான்:

‘இது ஒங்களோட வெர்ஷன். நான் நல்லாத்தான் விசாரிச்சேன். அது சூயிசைட் தான்.’

“ எப்போ விசாரிச்சீங்க? பூமிநாதன் உங்களை நாகர் கோவிலுக்கு கார்ல ஏற்றிக்கிட்டுப் போகும்போதா, அல்லது ஒங்க ஊருக்கு கூட்டி கிட்டுப் போகும்போதா? இல்ல அவர் எஸ்டேட்ல நடந்த காக்டெயில் பார்ட்டி யிலயா? எப்போ விசாரிச்சீங்க.’’

தாமோதரன், தமிழரசி போல் துடித்தான். கலாவதி போல் மருண்டான். மாடக்கண்ணுபோல்