பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

217



நிர்க்கதி பார்வையை நிலைநாட்டினான். பேசவாயற்று, பார்க்க கண்ணற்று, கேட்க காதற்றுப் போனவன் போல் அவன் அவர்களைப் பார்க்கும் தோரணையோடு எதையோ பார்த்தான். தொழிலாளர் தலைவர்கள், அவன் பதிலை எதிர்பார்த்துக் காத்து நின்றார்கள். அது கிடைக்காததால் ஒருவர், எஸ். பி. ஆபிசும் எங்களுக்குத் தெரியும். மறியல், ஆர்ப்பாட்டமும் எங்களுக்குப் புதுசில்ல’ என்றார்.

தாமோதரனும், தொழிலாளர் தலைவர்களும், எதிரும் புதிருமாய் விழித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஏட்டுப் பொன்னுச்சாமி, கையில் லத்திக் கம்போடு உள்ளே வந்து, தாமுவின் அருகே போய் நின்று கொண்டார். கையில் உருண்டைக்கம்பை உருட்டி, கண்களில் விழிகளையும் உருட்டி வாய்வழியாய் முரட்டுச் சொற்களை ஏவி விட்டார்.

என்னடா ஒங்க மனசுல நினைச்சீங்க? பொறுக்கிப் பசங்களா! இது போலீஸ் ஸ்டேஷன, ஒப்பன் வீடா? ஒரு போலீஸ் ஆபீசர் கிட்டே, இந்த அளவுக்கு மரியாதை இல்லாம பேசுற அளவுக்கு ஒங்களுக்குத் தைரியம் வந்துட்டா? பெண்டாட்டி கிட்டே சண்டை போட்டுட்டு, அவள் சோரம் போனாளோ, பேரம் போனாளோ யார் கண்டாங்க? அவள் கிட்ட வாழப் பிடிக்காமல் தூக்குப் போட்டு செத்த லூசுப்பயலுக்காக, ஏண்டா பைத்தியக் காரங்க மாதிரி வந்து எங்க பிராணனை எடுக்கிறீங்க? செத்துப் போனவன் பெண்டாட்டியே ஜாலியா இருக்கும் போது, ஒங்களுக்கு என்னடா வந்தது? ஒங்களை உள்ளே தள்ளினால்தான் புத்தி வரும். இந்தாப்பா பை நாட் செவன்...’

தொழிலாளர் பிரதிநிதி ஒருவர் ஏதோ சொல்லப்போன போது, தலைவர் போல் தோன்றிய ஒருவர், அவரை அடக்கினார். தாமோதரன், ஏட்டை அடக்குவார் என்று எதிர்பார்த்து, அவனையே பார்த்தார். அவனோ, அடங்கிப்