பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

நெருப்புத் தடயங்கள்


பெண் ஒருத்தி, கால்களில் கண்ணிர்பட, நெஞ்சினில் சோகம்படிய, தரை பார்த்த கண்ணிராய், செயலற்ற பெண்ணிராய் வந்து கொண்டிருந்தாள். அவளின் இயலாமை நடைக்கு ஏற்றாற்போல், ஆடவர் இருவரும், பாத வேகத்தைக் குறைத்தபடியும், கூட்டியபடியும் நடந்தார்கள்.

இந்த மூவர் முகப்பிற்குப் பின்னால் ஆண்களென்றாே பெண்களென்றாே லேசில் அடையாளம் பிரிக்க முடியாத இரண்டறக் கலந்த மனிதக் கூட்டம் அலையலையாய் வந்தது. எஸ்டேட்களில் இருந்து அப்போதுதான் வேலை முடிந்தவர் ”களாய் தோன்றினார்கள். சில தலைகளில் தேயிலைகள்: சிலவற்றில் துடைத்தாலும் போகாத பிசின்கள். பழுப்பேறிய உடையோடு, முறுக்கேறிய நடையோடு, படபடத்த முகத்தோடு, கலவரக் கண்களோடு காலெடுத்து வைத்தார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் ஏதோ ஒரு துக்கம் நடைபெற்று விட்டது போலவும், அதைத் துடைக்க நினைத்தவர்கள் போன்ற துயர நடை. ஒரே மாதிரி சிந்தித்து, ஒரே மாதிரி செயல்படுவது போன்ற தோரணை நடை.

அவர்களின் நிற்காத நடையும், நிறுத்தாத கோஷங்களும், அங்குள்ள தாவர வளாகத்திற்கு புதிய அர்த்தத்தைக் கொடுத்தன. ஒன்றாேடொன்றாய் உரசிக் கொண்டிருந்த தெங்கும், பாக்கும் தோழமை பேசுவதுபோல் தோன்றின. கரையோர கருவேல மரங்கள், கொதித்த உள்ளங்களின் கரங்களாய்த் தோன்றின எங்கிருந்தோ வீசிய காற்றை, அங்குள்ள மரங்களும் புதர்களும் மற்று முள்ள தாவரங்கள் ஒன்றுபட்டு உட்புக முடியாதபடி செய்யப்போவது போன்ற தோற்றம். மரங்களில் கூடிக் குலாவி, இப்போது ஆகாயத்தை வட்டமடித்த பறவையினக்குரல், புதிய பாசறையின் முரசொலி போல் ஒலித்தது.

எந்த போலீஸ் அதிகாரியும் இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் எப்படி ஆணையிடுவாரோ, அப்படித்தான் தாமோ