பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

நெருப்புத் தடயங்கள்


"இவள நல்லா பாரு ராசா! இப்போ ஒனக்கு திருப்தி தானே? நீ துப்பாக்கியால சுட்டாக்கூட இப்டி சுட்டிருக்க முடியாது. ஆயிரந்தான் இருந்தாலும், ஒண்ணன் முத்துலிங்கம் ஒனக்குப் பெரியவன் பாரு; ஒன்னைப் பார்க்கும் போதெல்லாம் 'வாங்கத்தான்னு' வாய் நிறைய கேட்ட இவளோட வாயைப் பாரு ராசா! என் ராசா! என் சீமைத் துரையே! இவளுக்கு நீ ஒரு சின்ன ஒத்தாசை பண்ணனும். ஒய்யா இவள் பேர்ல கொடுத்த பணத்துக்கு, ஒன்னோட தங்கச்சிக்கு மாமனாராய் போன மனுஷன் தன்னோட வயலுக்குப் பக்கத்துல கிடந்த ரெண்டு மரக்கால் நிலத்தை வாங்கிப் போட்டுட்டாரு. இந்தக் கிழவிக்குப் பிறகு இவளைக் கவனிக்க நாதியில்ல. அதனால், நீ ஒரு உதவி செய்யணும். ஒன்னோட அண்ணன் இவளோட உடம்புக்குத்தான் சூடுபோட்டான். நீ இவள் உயிருக்கு சூடு போட்டுடு ராசா... சீக்கிரம் ராசா... துப்பாக்கி இல்லியோ ?..."

தாமோதரன், துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்டவன் போல் உள்ளூறத் துடிதுடித்து, வெளிப்படையாய் குன்றிப்போய் நின்றான். ஆங்காங்கே பீடிகளை உறிஞ்சியபடி, வெற்றிலைப் பாக்கைக் குதப்பியபடி நின்றவர்களை, இருந்தவர்களை, நடந்தவர்களைப் பார்த்தான், எவரும் பாட்டியை அதட்டவில்லை. இறுதியில், கேட்கும் தூரத்தில் மண்டையனோடும், இதர வகையறாக்களுடனும் சீட்டாடிக் கொண்டிருந்த கில்லாடியார், பிடித்த சீட்டுகளைப் போடாமலே, பாட்டியைப் பார்த்துக் கத்தினார்:

"ஏய் சித்தி, ஒனக்கு என்ன வந்துட்டு! ஒனக்கும் சூடு போட்டுட்டால், இந்தப் பைத்தியாரத் தர்மர் மகள யாருழா கவனிக்கது?"

முத்துமாரிப் பாட்டி, திருப்பிக் கொடுத்தாள்:

"நேரம் காலம் தெரியாமல் வேல பார்க் சவங்களுக்கு நேரம் சரியில்ல; வசதியும் இல்ல. வசதியும், நேரமும்