பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

265


“பத்மாவிற்கு அந்த நேரத்திலும் அவள் பேச்சு இதயத்தைப் பூரிக்கச் செய்தது. உறவற்ற தனக்கு உறவு கொடுப்பவளை – இன்று அந்த உறவை வெளிப்படையாய் சொல்பவளை – கட்டியணைத்தாள். உள்ளத்தால் பூரித்து உணர்வால் அழுதாள்.

தமிழரசி பத்மாவை நச்சரித்தாள்.

“டெலிபோன்ல பேசலாமாடி?”

தமிழரசியை கைத்தாங்கலாய் பிடித்தபடி, பத்மா, மாடியில் இருந்து கீழே இறங்கினாள். அவர்களைப் பார்த்து, தூக்கம் கலைந்த ‘வாட்ச்மேன்’ எழுத்தான். அவனிடம், டெலிபோன் சாவியைக் கேட்டார்கள். அவன், வார்டன் அறையை கை நீட்டிக் காட்டிவிட்டு, கொட்டாவி விட்டான்.

வார்டன் அம்மாவின் அறைக்கு வந்து, பத்மா காலிங் பெல்லே அழுத்தினள். தமிழரசி கதவைத் தட்டினள். விட்டுவிட்டு காலிங்பெல் ஓசையும், விடாமல் கதவோசையும் ஒலித்தன. பத்து நிமிடமாகியும் பதில் இல்லை. பத்மா, குனிந்து பார்த்தாள். அறையில் பூட்டுத் தொங்கியது. வார்டன் அம்மா, ஒருவேளை செகண்ட் ஷோ போய்விட்டார்களோ என்னமோ?

தமிழரசி, தலைவிரி கோலமாக, பத்மாவின் கையைப் பிடித்தபடி, டெலிபோன் பக்கம் வந்தாள். கீழே, அவளுக் கென்றே போட்டதுபோல் கிடந்த கம்பியை எடுத்தாள். தடுக்கப்போன பத்மாவை, வெறிபிடித்தவள் போல் தள்ளி விட்டு விட்டு, கம்பியால் ‘டைகர்’ பூட்டை துழாவினாள். அது வேடனின் அம்பு பட்ட புலியாகி, டெலிபோன் ரிஸீவர் குமிழை லேசாய் உடைத்தபடி விழுந்தது. தூங்கிக் கொண்டிருந்த தோட்டக்கார – காவல் கார இளைஞன்மேல் உராய்ந்தது.

தமிழரசி, டெலிபோன் எண்களைச் சுழற்றினாள். நல்ல வேளையாக மணியடித்தது. ‘அடையார்’ ராஜ