பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

269


தமிழரசி, துள்ளி எழுந்தாள். தாமோதரனைக் கொட்டக் கொட்டப் பார்த்தாள். பிறகு இடுப்பில் செருகப்பட்ட மொட்டைக் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் வாங்கிக் கொண்டபோது, வாட்ச்மேன் வந்து “மேடம், வார்டன் ஒங்களை உடனே கூப்பிடுறாங்க” என்றான். அவன் சொன்னதைக் கவனிக்காமலே, தமிழரசி, கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த, தாமோதரனின் முகபாவத்தையே பல் தெறிக்கப் பார்த்தாள்.

கடிதத்தைப் படித்து முடித்த தாமோதரன், அவளைப் பார்க்க முடியாமல், எதிர்ப்புறத்துக் கண்ணாடியைப் பார்த்தான். அங்கேயும் தமிழரசியின் முகத்தைப் பார்த்து விட்டு, முன் வரிசைப் பற்கள், பின்னுதட்டை அழுத்த, நிலையற்று நின்றான்.

தமிழரசி, அவன் முன்னலும் பின்னலும் நகர்ந்து கத்தினாள்.

“மிஸ்டர் தாமு, சொல்லுங்க. இந்த லட்டர்ல எழுதியிருக்கதெல்லாம் உண்மையா? சொல்லுங்க சார்: ஒங்களத்தான்...இதோ என் துடிப்பைப் பாருங்க மிஸ்டர். நான் படுற பாட்டைப் பாருங்க மிஸ்டர்...‘நம்மைப் போய். இவள் சந்தேகப்பட்டுட்டாளேன்’னு நீங்க அரிச்சந்திரத் தனமாய்-நேர்மையில் ரோஷப்பட்டுப் பேசாமல் நிற்கிற, தாய் நான் இப்போகட நினைக்கேன். சொல்லுங்க மிஸ்டர். சொல்லுய்யா... ஒன்னைத்தான்... சொல்லித் தொலைங்க.”

தாமோதரன் கழுத்தைப் பின் பக்கமாய் சாய்த்தான். அவளை விட்டு விலகி நின்றான். தமிழரசிக்கு முதுகைக் காட்டியபடி “பொய்யுன்னல் நான் மறுத்திருப்பேனே” என்று சொல்லியபடியே, கைகளால் முகத்தை மூடிக் கொண்டான்.

தமிழரசி ஆவேசியானாள்.