பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

நெருப்புத் தடயங்கள்


“டிரைவர் அண்ணா! என்னைப் பைத்தியமுன்னு நினைக்காதீங்க. ஒருத்தரைப் பறிகொடுத்துட்டுத் தேடுறேன். இப்போ அவரைக் கண்டுபிடிக்க முடியாட்டால், அப்புறம் அவரை எப்பவுமே கண்டுபிடிக்க முடியாது. இந்த ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு விலமதிப்பில்லாதது; எவ்வளவு பணம் வேணுமுன்னாலும் தாரேன்... நான் சொல்ற இடத்துக்கெல்லாம் ஓட்டணும். கூடப்பிறந்த அண்ணன் மாதிரி ஒங்ககிட்டே கேட்கிறேன்... தயவு செய்து...”

அவளையே விநோதமாகப் பார்த்த டிரைவருக்கு, அவளின் சோகம் தொத்திக் கொண்டது. “எந்தப் பக்கம் போகணும்மா? ஸீட்ல நல்லா உட்காருங்க” என்றார். ஆட்டோரிக்‌ஷா வந்த வழியாய் வந்து, கிழக்குப் பக்கமாய் ஒரு கிலோ மீட்டர் தூரம் போனது. மீண்டும் திருப்பி ஓடியது. தெற்குப் பக்கம் அவன் தென்படவில்லை. வடக்குப் பக்கம் முட்டிச்சந்து. “அண்ணாநகர்” என்றாள். நகர்கிறது. வழியில் ஒரு பெட்ரோல்பங்கில் நின்றது. காலையிலேயே பெட்ரோல் போட்டு ரெடியாய் இருக்கக் கூடாது? நீங்க மட்டுமில்ல, எல்லா டிரைவர் களுக்குமே இப்படித்தான். அவசரமாய் போகும்போதுதான் பெட்ரோல் இருக்காது” என்றாள். டிரைவர், அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

வண்டி அண்ணாநகருக்கு வந்து அந்த லாட்ஜை கண்டு பிடிக்க அரைமணி நேரம் ஆகியது. விடுதிக்குள் சென்று விசாரித்தாள். தாமோதரன், பத்துப் பதினைந்து நிமிடத்திற்கு முன்புதான் அறையைக் காலிசெய்துவிட்டு ஒரு ஆட்டோவில் ஓடி விட்டானாம். அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவர்களைப் பார்க்காமலே அவள் ஆட்டோவிற்குத் திரும்பினாள். “சென்ட்ரல் ஸ்டேஷன்” என்றாள்.

தமிழரசி, ரயில் நிலையத்திற்குள் முட்டிமோதி ஓடினாள். டிக்கட் கவுண்டர்களைப் பார்த்தாள். தாமுவின் சாயல்