சு. சமுத்திரம்
43
கட்டும், இந்த தாமுவாவது குளிக்கச் சொல்லியிருக்கலாம். போன வேலையை விட்டுட்டு...
தமிழரசியுடன் வந்த பொன்மணி, வீட்டுக்குள் தனது “பெரியண்ணன்' முத்துலிங்கம் இருப்பதைப் பார்த்து விட்டு நழுவி விட்டாள். தமிழரசி, அவரிடம் குசலம் விசாரித்தாள்.
"சுகமா அத்தான்? என்ன இது, ரெண்டு பேர் போடுற வெத்திலையை நீங்க ஒரே ஆள் போடுறீங்க?’’
கல்யாண மாப்பிள்ளை ராஜதுரையும், மற்றவர்களும் சிரித்தபோது, முத்து லிங்கம் சமாளித்தார்.
"ரெண்டு கல்யாணம் நடக்கப் போறதுனால, ரெண்டு பேர் வெத்திலய போடுறேன். எங்க பொன்மணிக்கும், நாகர்கோவில் மாப்பிள்ளை குதிருது. ஒரே பந்தலுல ரெண்டு கல்யாணத்தையும் வைக்கலாமான்னு யோசனை கேட்க வந்தேன். நீ வரட்டுன்னு ஒங்க அண்ணன் சொன்னாரு. என்ன சொல்றே?”
தமிழரசி நேரடியாகக் கேட்டாள்: "பொன்மணிகிட்ட ஒரு வார்த்தை கேட்பீங்களா? வாழப்போறவள் அவள்... அவளுக்கு சம்மதமான்னு...”
முத்துலிங்கம், தமிழரசியை முடிக்கவிடாமல், அட்ட காசமாகப் பேசினார்:
“அதிகமா படிச்சால் புத்தி போயிடும் போலுக்கு... பெண்புத்தி பின்புத்தி என்கிறது மாதிரி பேசுறியே... பொன்மணியை சாகடிக்கவா போறோம்! அந்தக் கழுதைக் கிட்ட ஏன் கேட்கணும்? தூக்கி வைக்கிற பொதியை சுமக்க வேண்டியதுதான் அதனோட வேல?”