பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடீரென்று எந்த இடத்திற்கும் போகமாட்டார். உடனே, நாலா பக்கமும் ஆள் அனுப்பி ஞர்கள். டெலிபோனில் பல இடங்களுக்கும் தகவல் கொடுத்தார்கள். டில்லி நகரையே இச்செய்தி ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. ஆணுல். அதே சமயம் நேரு மிகவும் ஆனந்த மாக ஒரிடத்தில் பொழுது போக்கிக்கொண் டிருந்தார். இது, அவர்களுக்கெல்லாம் தெரியாது! எங்கே ? சிறிது துரத்திலுள்ள ஒரு பூங்காவிலே! குழந்தைகளோடு குழந்தையாக அவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர்களது ஆடல்களையும், பாடல்களையும் ரசித்துக்கொண்டே ஆனந்த வெள் , ளத்தில் மூழ்கியிருந்தார். அரசாங்க அலுவல்களே இ யும், அரசியல் தொல்லைகளையும் மறந்து கொஞ்ச " நேரமாவது இருக்கலாமே!’ என்றுதான் எவருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு நழுவி வந்திருந்தார் நேரு ! குல்லாய் மீது புரு ! டில்லியில் ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் இருக்கிறது. நேஷனல் ஸ்டேடியம் என்று அதற் குப் பெயர். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு லட்சக்கணக்கான குழந்தைகள் கூடியிருந்தார்கள். எல்லோரும் நேரு மாமா எப்போது வருவார், எப் போது வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். நேருவின் தலை தெரிந்தது. அவ்வளவுதான்! "சாச்சா நேரு - ஸிந்தா பாத் சாச்சா நேரு - ஸிந்தா பாத் (நேரு மாமா - வாழ்க!) என்ற வாழ்த்தொலி