52 பசி கோவிந்தம்
போது தகர டப்பாவில் தாளம் போட்டுக்கொண்டே, பாட வசதியா யிருக்கும்-படித்துப் பட்டம் பெற்று பதவியைத் தேடிப் பிடித் து, பணத்தோடு பணம் சேர்த்து, பாண்டியாக்” காரில் பவனி வரும் எங்களுக்கும் எங்கள் மனைவி மக்களுக்கும் அதுவே கண்கொள்ளாக் காட்சி, அதுவே கண் கொள்ளாக்
o 23
அத்தகைய கண்கொள்ளாக் காட்சிகளை காங்கள் காணவேண்டுமானுல் நீங்கள் வேதாந்தத்தைக் கடை பிடிக்கவேண்டியது முக்கியம்-அப்படி என்ருல் என்ன?-சுருக்கமாகச் சொல்கிறேன்-இந்த உலகில் காம் காண்பதெல்லாம் கனவு; காணுததெல்லாம் கனவு-இதுவே வேதாந்தம்-இந்த வேதாந்த விசாரத்தில் இறங்க வேண்டுமானுல் நீ என்ன செய்ய வேண்டும்? - வாழ்க்கை விசாரத்தைக் கைவிட வேண்டும்; அவ்வளவே. அதற்கு வழி என்ன? சைவமும் வைணவமும் ஒன்றே என்ருலும், கல்யாணக் குணங்கள்’ கிறைந்த வைணவச் சம்பிரதாயத்தை யொட்டியே சொல்கிறேன் :
- போடு போடு கோவிந்தா,
போடு போடு, கோவிந்தா! நானுமில்லை நீயுமில்லை ,
போடு போடு, கோவிந்தா! போடு போடு கோவிந்தா,
போடு போடு கோவிந்தா! நீயுமில்லை நானுமில்லை
போடு போடு, கோவிந்தா!