அபூர்வ ராகம் O 43
"ஆனாலும் பிடிப்பின் எடுப்பாய்ப் பூராவும் இருக்க முடியுமா? எதற்காக என்ன கேட்கிறாள் என்று புரிந்தும் புரியாது தவித்தேன். ராகம் தன் இயல்பு மாறாதவரை எப்படியிருந்தாலும் சுஸ்வரத்தான். இந்த மூடுமந்திரம் ஏன், பளிச்சென்று சொல்லேன்.”
கையில் சீப்பை வைத்துக்கொண்டு ஏற இறங்க என்னை ஒருமுறை மலர விழித்துப் பார்த்தாள். அங்கு ஆயிரம் கேள்விகள் குமுறின.
"இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சி களுக்குப் பறப்பதுதான் இயல்பு. இறக்கையை ஒடித்து விட்டு இயல்பு மாறாதவரை பட்சி பட்சிதான் என்றால் என்ன சரி? ராகத்திற்கும் பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் மேல் சஞ்சாரம்தானே!"
'இப்போ என்னவென்கிறாய்?"
'ஒன்றுமில்லை. ராகத்தின் முடிவும் எடுப்பாய்த் தானிருத்தல் வேண்டும்.’’ கொண்டையைப் போட்டுக் கொண்டு எழுந்தாள்.
எங்கே’’
'கீழே போகனும், இதோ வருகிறேன்...'
படுக்கையில் உட்காந்தபடி யோசனையில் ஆழ்ந்தேன். வெளிப்படையாகச் சொல்வி ஆற்றிக் கொள்வதில் ஆறுதலுண்டு. இப்படி வெளிக்காண்பிக்காமலே உள்படும் வேதனைதான் சகிக்க முடியவில்லை.
நிம்மதியற்ற உறக்கத்தில் கண்கள் செருகின.
நாளைக் காலை எழுந்ததும் அம்மாவிடம் சொல்லி விடுகிறேன். திருப்பதிக்குப் போவது முடியாது. அம்மா சும்மாயிருக்க மாட்டாள். வீட்டில் ரகளை நடக்கத்தான் போகிறது. நடக்கட்டும். கண்டிப்பாய் நடந்தே தீரும். இருந்தும் வேறு வழியில்லை. இதனால் தெய்வ கோபத்