பாயிரம்
௩
ஆதலா லியன்றமட்டு மவைகளைத் இருத்தவேண்டிய்தாயிற்று. கதையின்தொடர்ச்சியைப் பற்றி யவைகள் திருத்தமாகக் கூடாதவிடத்தில் அவைகளின்மட்டி லெச்சரிக்கை யுண்டாகும் பொருட்டுச் சிலவிவரங்களைக் கூட்டினோம். பலவிடத்தில் அந்தத் துர்ப்போதனைகள் வஞ்சனையாச் சொல்லப் படுகிறபோதும் அவைகளாற் றுன்பமுதலிய வாக்கினை விளைகிறபே௱தும் அவைகளி லடங்கிய கள்ளத்தனமும் அசத்தியமுந் தின்மையுந் தானாய் விளங்குகின்றன. ஆதலால் அவ்விடங்களி லவைகளைத் திருத்தவுங் குறிப்புகளை வைக்கவு மவசரமாயிருக்கவில்லை. வாத்திமார்களிதெல்லாம் பிள்ளைகளுக்கு விவரமாய்க் காட்டித் தெளிவிக்கவேணும்.
மீளவு மிக்கதைகளைக் குறித்துப் பொதுப்படச் சொல்லத்தகுஞ் சிலபுத்திமதிக ளாவன; புத்திக் கூர்மையைத் தூண்டிக் கிளப்புதற்கான இக்கதைகளில் வஞ்சகர் தகாதவுபாய தந்திரங்களைக் கொண்டு தங்க ளெதிராளிகளை யேய்த்து நிர்மூலமாக்குகிற வகையைப் பார்க்கிறபோது அவர்களுடைய வஞ்சனை தந்திரங்களை யறிந்து அவைகளின் மட்டி லெச்சரிக்கையா யிருப்பதினா லவைகளுக்குத் தப்பித்துக் கொள்ளும்வகையைக் கற்றுக்கொள்ள வேண்டிய தொழியத் தானு மப்படிப்பட்ட தின்மைகளைச் செய்யப் பரிச்சேதந் துணியலாகாது.