பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 பிட்ட காலத்துக்குள் விளக்கம் எதுவும் தராமலும் அல்லது கிடைத்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று அரசாங்கம் அபிப்பிராயப் பட்டால், சம்பந்தப்பட்ட நோட்டீஸ், அதற்குக் கிடைத்த விளக்கம், சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது துணைத் தலைவரை நீக்க வேண்டும் என்ற பிரேரணை ஆகியவற்றை ரெவின்யூ டிவிஷனல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்கள், இதைப்பற்றி பரிசீலனை செய்வதற்கு, ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி, பஞ்சாயத்து ஆனியன் கவுன்சில் ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அரசாங்கத்தின் பிரேரண்ை யைப் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஏற்றுக் கொண்டு விட்டால், அரசாங்கம் ஒரு அறிவிப்பின் மூலம்,சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது துணைத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட உத்திரவிடலாம். பஞ்சாயத்துச் சட்டம், 151-வது பிரிவில் இதைப் பற்றிய விவரம் உள்ளது. ~గాళ్స*ష్ట్రిష్క్రి--