பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மட்டுமே அவரிடம் திருப்பிக் கொடுக்கப்படும். மற்றவை பஞ்சாயத்துக்கு பறிமுதலாகிவிடும். 10. நியமன அறிவிப்பும் நியமனங்கள் பரிசீலனையும் (1) தேர்தல் அதிகாரியானவர் 8-வது விதியின்படி நியமனச் சீட்டைப் பெற்றுக் கொள்வதன் பிறகு, அதை சேர்ப்பிக்கின்ற நபரிடம் நியமனச் சிட்டுகளைப் பரிசீலனை செய்வதற்காக தீர்மானிக்கப்பட்ட தேதியையும் நேரத் தையும் இடத்தையும் அறிவிக்க வேண்டும்; நியமனச் சீட்டில் வரிசை எண்ணேக் குறிப்பிட வேண்டும்; நியமனச் சீட்டு, எத்தத் தேதியில், எந்த நேரத்தில் தன்னிடம் கொடுக்கப்பட்டது என்பது பற்றி அதில் சான்று எழுதி கையொப்ப மிடவேண்டும். (2) நியமனச் சீட்டுகள் தாக்கல் செய்தற்குரிய கடைசி தினத்தில் நியமனச்சீட்டுகள் கொடுப்பதற்குரிய நேரம் முடிவடைந்த பிறகு, தேர்தல் அதிகாரியானவர் 3-வது விதியில் நிர்ணயித்துள்ள நேரத்துக்குள் தன்னிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நியமனச் சீட்டுகளின் ஜாபிதா ஒன்றை 2-ம் நமூனப்படி தயாரித்து தமது காரியாலயத்தில் முக்கிய மான ஒரு இடத்தில் ஒட்டுவிக்க வேண்டும். நியமனச் சீட்டு க%ளப் ப்ரிசீலனே செய்வதற்காக தீர்மானித்துள்ள தேதி யையம், இடத்தையும் அவர் குறிப்பிட வேண்டும். 11. நியமனங்களைப் பரிசீலனை செய்தல் (1) நியமனங்களைப் பரிசீலனே செய்வதற்காகத் தீர்மானிக்கப்பட்ட தேதியன்றும் நேரத்திலும் அந்தப் பரிசீலனைக்கான இடத்திலும் அபேட்சகர், அவரை பிரேரே பிப்பவர், அபேட்சகருடைய அதிகாரம் பெற்ற நபர் ஆகியோர் வந்திருக்க அனுமதி உண்டு. மற்றவர்கள் வரக் கூடாது. 10-வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எல்லா அபேட்சகர்களின் நியமனச் சீட்டுகளேயும் பரிசீலனே செய் வதற்கு நியாயமான வசதிகளே தேர்தல் அதிகாரியானவர் அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். :- - (2) தேர்தல் அதிகாரியானவர் அதன்பின் நியமனச் சிட்டுகளே பரிசீலனை செய்யவேண்டும். நியமனத்துக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் எழுந்தால் அனைத்தையும் முடிவு அவேண்டும். அவர் அம்மாதிரியான ஆட்சேபனைமீது