பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. 13. வாக்கெடுப்பு ரகசியமாக இருப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளே கூட்டத் தலைவர் செய்ய வேண்டும். வாக் களித்த அங்கத்தினர்கள் அடுத்து வாக்களிக்கப் போகும் அங்கத்தினர்களே அணுக முடியாதபடி செய்ய வேண்டும். பல மாதிரியான வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துவது வாக்கெடுப்பின் ரகசியத் தன்மைக்கு முரணுனதாகும். 14. (1) படிப்பு இல்லாத காரணத்தாலோ, கண் தெரியாத காரணத்தாலோ அல்லது அங்கஹlனம் காரண. மாகவோ அங்கத்தினர் ஒருவர்; வாக்குச் சீட்டில் எழுதி யிருப்பதை படிக்க முடியாமலும் அதில் குறியிட இயலாமல் இருந்து, தமது வாக்கைப் பதிவு செய்வதற்கு உதவி வேண்டினல், கூட்டத் தலைவர் அந்த அங்கத்தினரின் விருப்பப்படி அவருடைய வாக்குச் சீட்டில் குறியிட்டு, அந்தக்குறி வெளியே தெரியாதபடி மடிக்க வேண்டும். (2) பிறகு, மேற்படி அங்கத்தினர் தானகவோ அல்லது கூட்டத் தலைவர் உதவியுடனே வாக்குச் சீட்டை வாக்குப் பெட்டிக்குள் போட வேண்டும். (3) கூட்டத் தலைவர் இந்த விதியின்படி செயலாற் றும் போது மேற்படி அங்கத்தினர் யாருக்கு வாக்களித்தார் என்பதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். மேற்படி விஷயங்களேப் பற்றி கூட்டத் தலைவர் சுருக்கமாக குறிப்பு எழுதி வைக்க வேண்டும். ஆல்ை, மேற்படி குறிப்பில், அந்த அங்கத்தினர் எந்த அபேட்சகருக்கு வாக்களித்தார் என்பதை எழுதி வைக்கக்கூடாது. 15. அங்கத்தினர்கள் வாக்களித்து முடிந்ததும் கூட்டத் தலைவர் வாக்குப் பெட்டியை அங்கே இருக்கும் அங்கத்தினர்கள் முன்னிலேயில் திறந்து அதிலிருக்கும் வாக்குச் சீட்டுகளே வெளியே எடுத்து, ஒவ்வொரு அபேட் சகருக்கும் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை ஒரு அறிக்கையில் பதிவு செய்ய வேண்டும். 16. கீழ்க்கானும் விஷயங்கள் காரணமாக வாக்கு சீட்டுகள் செல்லாமல் போய்விடும்.