பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 தண்ணிருக்காக அரசாங்கத்துக்கோ அல்லது உபயோகிக்கப் பட்ட தண்ணிருக்கோ அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய தண்ணிர் வரியும் அடங்கும். (2) உட்பிரிவு (1)-ன்படி கட்டவேண்டிய பிரதேச வரி, எந்த நிலம் சம்பந்தமாகவும் எவரேனும் பிரதேச வரியைச் செலுத்துவதற்கு உட்பட்டிருக்கிருரோ அத்தகைய நின்ங் களின் மீது அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய வரி எனக் கருத வேண்டும். அத்தகைய நிலங்களும் அவற்றின் மேலுள்ள கட்டிடங்களும் அவற்றின் விளேபொருள்களும் மேற்படி பிரதேச வரிக்கு ஜாமீனுகக் கருதப்படும். (3) சென்னே, 1864-ம் வருஷத்திய நிலவரி வசூல் ≪#363; Madras Revenue Recovery Act, 1864] offspáār, எந்த நிலங்களின் விஷயமாக இந்தச் சட்டத்தின்படி பிரதேச வரி செலுத்தப்படத்தக்கதோ அவற்றின் மீது பாக்கி யுள்ள நிலவரியைச் செலுத்துவதற்கும் வசூலிப்பதற்கும் பிரயோகப்படுவது போலவே, இந்தச் சட்டத்தின்படி பிரதேச வரியைச் செலுத்துவதற்கும் வசூலிப்பதற்கும் பிரயோகமாகும். - (4) (a) ஒவ்வொரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதி யிலும் வசூலிக்கப்பட்ட பிரதேச வரித் தொகையில் 4/9 (ஒன்பதில் நான்கு) பாகத்துக்கு சமமான ஒரு தொகையை பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதிக்கு வரவு வைக்க வேண்டும். (b) ஒவ்வொரு பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகு தியில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து பட்டணத்திலும் வசூலிக்கப்பட்ட பிரதேச வரித் தொகையிலிருந்து 219 (ஒன்பதில் இரண்டு) பாகத்துக்குச் சமமான ஒரு தொகையை பட்டணப் பஞ்சாயத்து நிதிக்கு வரவு வைக்க வேண்டும். (c) ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில் வசூலாகும் பிரதேச வரியில் எஞ்சியிருக்கும் தொகையில், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தீர்மானிக்கும் ஒரு பங்கு கிராமப் பஞ்சாயத்து நிதிக்கு வரவு வைக்கப்பட வேண்டும். அத்தகைய சதவிகிதமானது, அந்தப் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுள்ள எல்லா கிராமப் பஞ்சாயத்துகளும் பெறக் கூடிய மொத்த வருமானத்தில், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலிலுள்ள கிராம மக்கள் தொகையில் ஒவ்வொரு நபருக்கும் 20 காசுகள் வீதம் கண்க்கிடப்பட்ட ஒரு H–13