பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 (8) அரசாங்கத்தார் அறிவிப்பு வெளியிட்டு அதன் மூலமாக,- - (i) ஒரு மாவட்டத்தில் அடங்கியுள்ள ஒரு பிரதேச விஸ் தீரணத்தை அந்த மாவட்டத்திலிருந்து விலக்கலாம்; அல்லது, (ii) ஒரு மாவட்டத்தை அடுத்திருக்கிற ஏதாவது ஒரு பிரதேச விஸ்தீரணத்தை அந்த மாவட்டத்தில் சேர்க்கலாம்; அல்லது, - (iii) உட்பிரிவு (2)ன் கீழ் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்யலாம் அல்லது மாற்றி அமைக்கலாம்; அல்லது, (iv) ஒரு மாவட்டத்தின் பெயரை மாற்றலாம். (4) உட்பிரிவு (2) அல்லது (8) வது உட்பிரிவின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்குமுன், அந்த அறிவிப்பு பிறப்பிக்கப்படுவதல்ை பாதிக்கப்படும் மாவட்ட அபிவிருத்தி மன்றம் அல்லது மாவட்ட அபிவிருத்தி மன்றங் கள் அந்த உத்தேசத்திற்கு எதிராகக் காரணம் காட்டு வதற்காக அரசாங்கத்தார் நியாயமான வாய்ப்பு ஒன்றை அந்த மன்றங்களுக்கு அளிப்பதுடன், அந்த மன்றங்கள் எவையேனும் விளக்கங்களேயும் ஆட்சேபனைகளேயும் கொடுத் திருந்தால், அவற்றை ஆலோசனை செய்யவும் வேண்டும். (5) உட்பிரிவு 2-ன் கீழ் அல்லது (3)வது உட் பிரிவின் கீழ் வெளியிடப்படும் ஒவ்வொரு அறிவிப்பிலும் அதற்கான காரணங்களேப் பற்றிய அறிக்கை ஒன்று இருக்க வேண்டும். 4. மாவட்ட அபிவிருத்தி மன்றங்களை அமைத்தல் (1) அரசாங்கத்தார் அறிவிப்பு வெளியிட்டு அதன் மூலமாகவும் அதில் குறிப்பிடக்கூடிய தேதியிலிருந்தும் ஒரு மாவட்டத்திற்கு, மாவட்ட அபிவிருத்தி மன்றம் ஒன்றை அமைக்கச் செய்யலாம் ; அந்த மன்றத்தில் அடியிற் கண்டவர்கள் அங்கத்தினர்களாயிருப்பார்கள் : (a) தமது அலுவல் காரணமாக, மாவட்டக் கலெக் டர். (ஜில்லா கலெக்டர்)